WHAT’S HOT NOW

ads header

நயினாதீவு செய்திகள்

Theme images by kelvinjay. Powered by Blogger.

உள்நாட்டு செய்திகள்

சர்வதேச செய்திகள்

மரண அறிவித்தல்

எம்மைப்பற்றி

அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே... அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே... நயினைப் பற்றாளர்களே.... நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்.. நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள். நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும். நன்றி. நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல், நயினை நட்சத்திரச் செய்தி nainativu starnews தொடர்புக்கு - nainativustarnews@gmail.com

மரண அறிவித்தல் : பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள்

 


நயினாதீவு 5 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் யாழ் கொட்டடியை வதிவிடமாகவும் கொண்ட திருமதி பழனிவேல் ஜெயலட்சுமி அவர்கள் 04/08/2021 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

இறுதி கிரியைகள் நாளை 05.08.2021 அவரது இல்லத்தில் 12 மணிக்கு இடம்பெற்று 02 மணியளவில் வில்லூன்றி இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.


தகவல்
குடும்பத்தினர்.

நன்றி. 
நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : இலங்கைநாதன் மீனாட்சி அவர்கள்



நயினாதீவு 5 வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி இலங்கைநாதன் மீனாட்சி அவர்கள் 29/06/2021 செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் இன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்
நன்றி. 

நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நட்சத்திரச் செய்தி.

மரண அறிவித்தல் : திருமதி யோகநாதன் சிவகெளரி அவர்கள்


நயினாதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும் 5ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்ட திருமதி யோகநாதன் சிவகௌரி அவர்கள் 29.06.2021 செவ்வாய்க்கிழமை இன்று இறைவனடி சேர்ந்தார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய நயினாதீவு நாகபூசணி அம்பாளை வேண்டுகின்றோம்.
தகவல்
குடும்பத்தினர்

நன்றி. 

நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி.

அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 2021


அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல் 

நேற்றைய தினம் 16.06.2021 புதன் கிழமை 

ஆலய அறங்காவல சபையினரால் பூரண விளக்கத்துடன் உதயன் பத்திரிகையில் அறியப்படுத்தப்பட்டள்ளது.

நாட்டில் நிலவும் அதீத நோய் தாக்கத்தால் அம்பிகையின் மகோற்சவம் 10 பேருடன் மட்டுமே  நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அம்பிகையின் உட்சவம் 10 அடியார்களுடன் நடாத்துவது என்பது அசாத்தியமான விடையம் எனவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க மாவட்ட அதிபரின் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நடாத்தப்பட வேண்டியது விதியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

10.06.2021 தொடக்கம் 25.06.2021 வரை 16 தினங்களும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று 10 இற்கு மேற்படாத ஆலய ஊழியர்களுடன் உள்வீதி வலம் வர திருவருள் கைகூடியுள்ளது என்பதனை உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்.

இவ் ஏற்பாடு கூட இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ் இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.

அம்பிகை அடியவர்கள் வீட்டில் இருந்தே அம்பாளை வழிபாடு செய்யும் வண்ணம் வேண்டிநிற்கிறார்கள்.