வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த ஆடிப்பூரத்திருவிழா 07.08.2015 முதல் 15.08.2015 வரை ஒன்பது தினங்கள் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் திருமுறைபாராயணங்கள் தீபாராதனைகள் இடம்பெற்று நாளை பத்தாம் நாள் (16.08.2015) ஞாயிற்றுக் கிழமை மூலமூர்த்தி எம்பெருமாட்டிக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் திருவூஞ்சல் மற்றும் சிறப்புவழிபாடு இடம்பெற்று அதனைத் தொடர்ந்து அழகிய தாமரை வாகனத்தில் ஆரோகணித்து திருவீதி உலா வலம் வரும் அழகிய அற்புத திருக்காட்சி இடம்பெறும்.
அம்பிகை அடியவர்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
குறிப்பு :
அடியவர்கள் யாவரும் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி அம்பிகையின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
அமுதசுரபி அன்னதானசபையினர் சிறப்பாக அடியவர்களுக்கு அன்னதானப் பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.
அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக !
அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் ஆடிப்பூரத் திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட (
Nainativu Star ) இணையத்துடன் இணைந்திருங்கள்.
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,