அருள்மிகு ஶ்ரீ நயினாதீவு நாகபூசணி அம்பாள் ஆலய வருடாந்த மகோற்சவம் பிற்போடப்பட்டுள்ளமை பற்றிய அறிவித்தல்
நேற்றைய தினம் 16.06.2021 புதன் கிழமை
ஆலய அறங்காவல சபையினரால் பூரண விளக்கத்துடன் உதயன் பத்திரிகையில் அறியப்படுத்தப்பட்டள்ளது.
நாட்டில் நிலவும் அதீத நோய் தாக்கத்தால் அம்பிகையின் மகோற்சவம் 10 பேருடன் மட்டுமே நடாத்த அனுமதிக்கப்பட்டதாகவும் அம்பிகையின் உட்சவம் 10 அடியார்களுடன் நடாத்துவது என்பது அசாத்தியமான விடையம் எனவும் அரச வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட அரசாங்க மாவட்ட அதிபரின் ஒருங்கிணைக்கப்பட்ட தீர்மானங்களுக்கு அமைய நடாத்தப்பட வேண்டியது விதியாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
10.06.2021 தொடக்கம் 25.06.2021 வரை 16 தினங்களும் விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று 10 இற்கு மேற்படாத ஆலய ஊழியர்களுடன் உள்வீதி வலம் வர திருவருள் கைகூடியுள்ளது என்பதனை உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களுக்கு அறியப்படுத்தியுள்ளார்கள்.
இவ் ஏற்பாடு கூட இறுக்கமான சுகாதார விதிமுறைகளின் கீழ் இடம்பெறுகின்றது எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்கள்.
அம்பிகை அடியவர்கள் வீட்டில் இருந்தே அம்பாளை வழிபாடு செய்யும் வண்ணம் வேண்டிநிற்கிறார்கள்.