அன்பார்ந்த நயினை வாழ் உறவுகளே...
அன்பார்ந்த நயினை புலம் பெயர் உறவுகளே...
நயினைப் பற்றாளர்களே....
நயினை மண்ணில் இடம் பெறுகின்ற அனைத்து சமபவங்கள்,நிகழ்வுகள்,ஆலய திருவிழாக்கள் என்பவற்றின் கணணிஒளியினை எமது முகப்புத்தகத்தில் பார்வையிட முடியும்..
நம்மூரின் நிகழ்வுகளை நாளுக்கு நாள் பார்வையிட
நயினை நட்சத்திரச் செய்தியுடன் இணையுங்கள்.
நயினை மண்ணில் இடம் பெறும் அனைத்து சிறப்பு நிகழ்வு களையும் எம் முகப்புத்தகத்தின் ஊடாக உடனுக்குடன் பார்வையிட முடியும்.
நன்றி.
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி
nainativu starnews
தொடர்புக்கு - nainativustarnews@gmail.com
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய ஐந்தாம் நாள் பகல் திருவிழா அழகிய தாமரை மலரில் மேலமர்ந்து வரிசையாக குடைகளுடன் வலம் வந்து அடியவர்கள் குறைகளினை நீக்கி திருவருள் பாலித்த நயினை நாகபூசணி தாய்.
ஈழத்து வரலாற்றுச் சிறப்பு மிகு “நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கவசம்” 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புத்தக வடிவிலும், ஒலிப்பேழையாகவும் வெளியிடப்பட்ட நேரலை வீடியோ.
இவ் வெளியீட்டு நிகழ்வு “அனலை எக்ஸ்பிரஸ்” (www.analaiexpress.ca) என்ற இணையத்தினூடாக நேரலையாகவும் அனலை FM ஊடாகவும் ஓம் ரிவி ஊடாகவும் ஒலிபரப்பப்பட்டது.
ஈழத்து வரலாற்றுச் சிறப்பு மிகு “நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கவசம்” 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புத்தக வடிவிலும், ஒலிப்பேழையாகவும் வெளியிடப்பட உள்ளதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அலைமோதும் கரைதனில் அமர்ந்திருந்து அருளாட்சி புரியும் அன்னை நாகபூசணி தாயவளின் புகழினை ஆனந்த கீதமாய் விருந்தளித்து அன்னையவள் உள்ளம் குளிர்ந்து அவள் அருட்கடாச்சத்தினால் கவி வரிகள் தொடுத்து அம்பாளின் கவசம் தனை இயற்றும் பெரும் பாக்கியம் நயினை அன்னைமகன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இறுவெட்டு சிறந்த முறையில் வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்.
குறிப்பாக ஈழத்தின் சிறந்த இசையமைப்பு பணியினை மேற்கொண்டு வரும் சப்தமி இசைக்குழு சத்தியன் அவர்களது இசையிலும் நயினை அன்னை மகன் என அறிய நவரூபன் அவர்களது பாடல்வரிகளுக்கு செல்வி ஜெகனி அவர்கள் குரல் இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முற்றிலும் ஈழத்து கவிஞர்களது படைப்பாக முதன் முதலாக நயினை நாகபூஷணி அம்பாளுக்கு இயற்றப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “அனலை எக்ஸ்பிரஸ்” (www.analaiexpress.ca) என்ற இணையத்தினூடாக நேரலையாகவும் அனலை FM இணை ஒலிபரப்பப்படவுள்ளது.
" நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாள் கவசம்" ஒலிப்பேழை , புத்தக வெளியீடு ! ! !
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய நான்காம் நாள் இரவு திருவிழா அழகிய அலங்கரிக்கபட்ட காம தேனு (காராம் பசு) வாகனத்தில் ஏறி வலம் வந்து அடியவர்களுக்கு திருவருள் பாலித்த நயினை நாகபூசணி தாய்