யாழ்ப்பாணம் மண்டைதீவு திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தான வருடாந்த மகோற்சவ பெருவிழா 20.08.2015 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
"சித்திவிநாயகாய மங்களம்"
சித்தி விநாயகப் பெருமான் அடியார்களே !!
இலங்கையின் வடபால் அமைந்த யாழ்ப்பாணத்தின் தென் திசையில் வங்கக்கடலலைகள் தாலாட்டும் சப்ததீவுகளின் தலைத்தீவாக விளங்கும் மண்டைதீவில் திருவெண்காடு என்னும் புண்ணிய சேஸ்திரத்தில் வீற்றிருந்து திருவருள் பாலித்துகொண்டிருக்கும் ஸ்ரீ அம்பலவாணர் சித்தி விக்னேஸ்வர பிள்ளையாருக்கு நிகழும் மங்களகரமான மன்மத வருஷம் ஆவணித்திங்கள் 03ம் நாள் (20.08.2015) வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் மகோற்சவம் நடைபெற சித்திவிநாயகபெருமான் திருவருள் பாலித்துள்ளார்.
மகோற்சவ ஆரம்பம் - 20.08.2015 (கொடியேற்றம்).
மகோற்சவ நிறைவு - 30.08.2015 (வைரவர் உற்சவம்).
குறிப்பு :
அடியவர்கள் யாவரும் இத்திருவிழா காலங்களில் ஆசாரசீலர்கலாக ஆலயத்துக்கு வருகை தந்து தங்களால் இயன்ற பால், தயிர், இளநீர், புஷ்பம், பூமாலை, அறுகம்புல் முதலியவற்றை தந்துதவி விநாயகப்பெருமானின் இஷ்ர சித்திகளினை பெற்றுய்யும் வண்ணம் வேண்டுகின்றோம்.
எம் பெருமானின் உற்சவ காலத்தில் பத்து தினங்களும் அன்னதான நிகழ்வு இடம்பெறும்.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
அனைவரும் வருக எம் பெருமானின் திருவருளை பெறுக !
சுபம் !
இங்ஙனம்
பொ.வி.திருநாவுக்கரசு
இரத்தினசபாபதி யோகநாதன் (இந்திரன்)
(தர்மகர்த்தாக்கள்),
மகோற்சவ உபயகாரர்கள்,
சித்திவிநாயகப் பெருமானின் தொண்டர்கள்,
திருவெண்காடு ஸ்ரீ சித்திவிநாயகர் தேவஸ்தானம்
மண்டைதீவு , இலங்கை.
நன்றி.
சித்திவிநாயகப் பெருமானின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
சித்திவிநாயகப் பெருமானின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,