வரலாற்று சிறப்பு மிக்க நயினை ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த உயர்திருவிழாவானது இன்றைய சாந்தி நிகழ்வுடன் நாளை (17.06.2015) புதன் கிழமை ஆரம்பமாகின்றது.
அம்பிகை அடியவர்களே அம்பிகையின் உயர்திருவிழாவில் கலந்து கொண்டு அம்பிகையின் அருளாசினை பெற்று உய்யும் வண்ணம் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.
அத்துடன் அம்பிகை மெய்யடியார்களே அம்பிகையின் உயர்திருவிழா அருட்காட்சிகளினை பார்வையிட நயினை நட்சத்திரச் செய்தியுடன் (Nainativu Starnews)இணைந்திருங்கள்..
அம்பிகையின் பெயரால் ஏமாற்றும் பேர்வழிகள் எவரிடமும் எக் காணிக்கைகளினையும் வழங்க வேண்டாம் என அம்பிகை அடியவர்களினை தாழ்மையுடன் வேண்டிக் கொள்கின்றனர் ஆலய அறங்காவல சபையினர்.
அமுதசுரபி அன்னதானசபையினர் உற்சவ காலத்தில் சிறப்பாக இவ்வாண்டும் அன்னதானப்பணியினை மேற்கொள்வதாகவும் அறிவுத்துள்ளனர்.
அன்னையின் அருள் பெற அடியவர்கள் அனைவரும் வருக !
நன்றி.
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,
அன்னையின் பாதம்பணிந்து
நிகழ்கால நயினைமண்ணின் நிதர்சன தேடல்,
நயினை நட்சத்திரச் செய்தி,