ஈழத்து வரலாற்றுச் சிறப்பு மிகு “நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் கவசம்” 21.06.2015 ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12.00 மணியளவில் நயினை ஸ்ரீ நாகபூஷணி அம்பாள் ஆலயத்தில் புத்தக வடிவிலும், ஒலிப்பேழையாகவும் வெளியிடப்பட உள்ளதனை மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அலைமோதும் கரைதனில் அமர்ந்திருந்து அருளாட்சி புரியும் அன்னை நாகபூசணி தாயவளின் புகழினை ஆனந்த கீதமாய் விருந்தளித்து அன்னையவள் உள்ளம் குளிர்ந்து அவள் அருட்கடாச்சத்தினால் கவி வரிகள் தொடுத்து அம்பாளின் கவசம் தனை இயற்றும் பெரும் பாக்கியம் நயினை அன்னைமகன் அவர்களுக்கு கிடைத்துள்ளது. இறுவெட்டு சிறந்த முறையில் வெளியிடுவதற்கு வாழ்த்துக்கள்.
குறிப்பாக ஈழத்தின் சிறந்த இசையமைப்பு பணியினை மேற்கொண்டு வரும் சப்தமி இசைக்குழு சத்தியன் அவர்களது இசையிலும் நயினை அன்னை மகன் என அறிய நவரூபன் அவர்களது பாடல்வரிகளுக்கு செல்வி ஜெகனி அவர்கள் குரல் இசைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. முற்றிலும் ஈழத்து கவிஞர்களது படைப்பாக முதன் முதலாக நயினை நாகபூஷணி அம்பாளுக்கு இயற்றப்பட்ட ஒரு வரலாற்று ஆவணமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் அனைத்து அம்பிகை அடியார்களையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றார்கள் விழா ஏற்பாட்டாளர்கள். இவ் வெளியீட்டு நிகழ்வுகளை “அனலை எக்ஸ்பிரஸ்” (www.analaiexpress.ca) என்ற இணையத்தினூடாக நேரலையாகவும் அனலை FM இணை ஒலிபரப்பப்படவுள்ளது.