வலி.தெற்கு பிரதேசசபைக்கு உட்பட்ட சுன்னாகம் பொதுநூலகம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு மாணவர்கள் மற்றும் வாசகர்கள் மத்தியில் வாசிப்பு பழக்கத்தை மேம்படுத்தும் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது.
இதன் ஒரு கட்டமாகப் பல்வேறு துறை சார்ந்த நூல்களும், கடந்த வருடம் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு நடாத்தப்பட்ட சித்திரப் போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின் சித்திரங்களும் நூலகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறித்த காட்சிப்படுத்தலில் உள்ளூர் எழுத்தாளர்கள் எழுதிய நூல்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.
வாசிப்பு மாதத்தை ஒட்டி "வாசிப்பு உலக அறிவிற்கான நுழை வாயில்" எனும் தொனிப்பொருளில் முன்பள்ளிகள் மற்றும் சனசமூக நிலையங்களூடாக நடமாடும் சேவைகளையும் சுன்னாகம் பொது நூலகம் முன்னெடுத்து வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது
இதேவேளை, நடமாடும் சேவைகளில் மாணவர்களும், பொதுமக்களும் ஆர்வத்துடன் பங்குபற்றி பயன்பெற்று வருகின்றமையும் வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் மாணவர் மற்றும் பொது வாசகர்கள் மத்தியில் பல்வேறு போட்டிகளை நடாத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.